#Breaking:துணை முதல்வர் பதவி…!என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக மீண்டும் மோதல்..!

துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.

இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.

இதன்காரணமாக,அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு காலதாமதமாகி வருகிறது. இதற்கிடையில்,பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏ ஆக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால்,முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. பின்னர், முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாகவும்,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,பாஜகவில் இருந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சிக்குள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன்பின்னர்,பதவிகளுக்கான பெயர் பட்டியல் தயாரானது.

இந்நிலையில்,இந்த பெயர் பட்டியலை,முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு,பாஜக மேலிட பொறுப்பாளர் எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜகவினர் தற்போது வருகை புரிந்தனர்.

அதன்பின்னர்,சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான பெயர்பட்டியலை குறித்து பேசாமல்,துணை முதல்வர் பதவி,இலக்கா பங்கீடு தொடர்பாக எம்.பி.ராஜூ சந்திரசேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால்,முதல்வர் ரங்கசாமி கடும் கோபம் கொண்டார்.

இதனையடுத்து எம்.பி.ராஜூ சந்திரசேகரிடம்,’இது தொடர்பாக நீங்கள் என்னிடம் பேசக்கூடாது,ஏனெனில்,டெல்லியில் இருக்கும் உங்கள் தலைவர் அமித்ஷாவிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டேன்”,என்று திட்டவட்டமாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

மேலும்,துணை முதல்வர் பதவி கிடயாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால், ஏமாற்றத்துடன் பாஜகவினர் திரும்பினர்.இதன்காரணமாக,  துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

3 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago