மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது- தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,2019 மக்களவை தேர்தல் தேதி வெளியானதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை தேர்தல் ஆணையரின் உத்தரவை அடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி போலீசில் புகார்அளித்துள்ளார்.பின் இது தொடர்பாக  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment