அரங்கை அதிர வைத்த தளபதி விஜயின் பெயர்.! ஆடிப்போன ஆண்டவர் கமல்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் ட்ரெய்லரும் வெளியிடபட்டது.

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சிலம்பரசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விஜய், ரஜினி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் கலந்து கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து விஜய் நிகழ்ச்சிக்கு வரவில்லை ஆனால், விஜயின் பெயரை கூறியவுடன் அரங்கமே அதிர்ந்த சம்வபம் தான் நடந்துள்ளது. ஆம், நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி தொடக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசும் போது முதல் படம் மாநகரம், இரண்டாம் படம் கைதி, மூன்றாவது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் என்று கூறியவுடன் கூறியவுடன் ரசிகர்கள் அனைவரும் சத்தமாக கத்தினார்கள். 2 நிமிடம் சத்தம் நிக்கவில்லை இதனால் அனைவரும் அமைதியாக இருக்கா கூறுவது போல கமல்ஹாசன்  கையை அசைத்தார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.