சவப்பெட்டியில் நாலு மூலையிலும் அடிக்கிற ஆணிதான், இந்த நாலு தொகுதி இடைத்தேர்தல்! உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக ஆட்சியை சவப்பெட்டியில் வைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சவப்பெட்டியில் நாலு முலையிலும் அடிக்கிற ஆணி தான், இந்த நாலு தொகுதியிலும் நடக்கிற இடைத்தேர்தல்.” என தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு அடிக்கிற ஆணி என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment