உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு!

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது 53 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்திற்கான உலகளாவிய தொற்றுநோய் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், புதிதாக 41 லட்சம் பேருக்கு மட்டுமே இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 சதவீதமும் உயிரிழந்தவர்கள் 2 சதவீதமும் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் கடந்த வாரத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அதற்கு முந்தைய வாரத்தில் ஒப்பிடுகையில் 23 சதவீதம் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பி.1.617 வகை கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும், இந்த வைரஸ் தற்பொழுது பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 வகைகளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

4 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

6 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

8 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

9 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

9 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

9 hours ago