போதையில் தாய் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு அழைப்பு கொடுத்து மாட்டிக்கொண்ட கொலைகார மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பாரியூரில் உள்ள நஞ்சாகவுண்டபாளையத்தில் கணவரை இழந்து தனது மகன் கருப்பசாமி உடன் வாழ்ந்து வருபவர் தான் மாகாளி. ஏற்கனவே கணவன் இன்றி வறுமையில் அவதிப்படும் இந்த தாயாரின் மகன் கருப்பசாமி மிகவும் குடித்துவிட்டு அவரது தாயை கொடுமை செய்து வந்துள்ளார். வழக்கமான அவரது மகனின் கொடுமை தங்க முடியாத மாகாளி அவரது சித்தி வீட்டிற்கு சென்று விவாசாய தொழில் சிறிய கூலி தொழில் செய்து வந்துள்ளார்.
நான்கு மாதங்கள் அவர் அங்கு நிம்மதியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தாயை அழைத்துவர மேவேணியில் உள்ள தாயின் சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தாயை அழைத்ததும் அவர் வர மறுத்ததால், அடித்து ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு கூடி சென்றுள்ளார். இவர் அடித்ததில் தலையில் படுகாயமடைந்த அவரது தாயார் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு இறந்துவிட்டார் என்றால் சந்தேகப்படுவார்கள் என்ற எண்ணம் கூட கருப்பசாமிக்கு தோன்றவில்லை.
மது போதையில் இருந்ததால் அவராகவே அனைத்து உறவினர்களுக்கும் போன் செய்து தகவல் அளித்துள்ளார். திரண்டு வந்த உறவினர்களில் ஒருவராக வந்த மாகாளியின் சித்தி தனது அக்கா மக்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது தலையில் பலத்த காயம் இருப்பதாய் கண்டு கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். தவளை தன் வாயால் கேட்டதுபோல அம்மாவை கொண்டுவிட்டு இறந்துவிட்டதாக உடனடி நாடகமாடிய கருப்பசாமியின் மீது அவரது பெரும் கோபத்தில் இருக்கின்றனர்.
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…
Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…