மருமகனுக்கு 67 வகை உணவை தன் கையால் செய்து விருந்தளித்த மாமியார்..!

ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார்

ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார் வீட்டிற்கு வரும் தனது மருமகனுக்கு தனது கையாலேயே 67 வகை சமைத்து விருந்து அளித்த சம்பவம் மிகவும் வைரலாகி பாராட்டப்பட்டு வருகிறது, அவர் கையால் தனது மருமகனுக்கு பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, மற்றும் கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு வகைகளை வைத்துள்ளார்.

இவர் சமைத்து பரிமாறிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதற்கு அனைவரும், இப்படி ஒரு மாமியார் கிடைக்க மருமகன் குடுத்து வைக்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.