மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்ட அமைச்சர்…!

 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார்.

மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இக்கூட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுகவினர் வரிசையாக இந்த பிரியாணியை வாங்கி தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். மேலும் நின்றபடியே பிரியாணி சாப்பிட்ட அவர், பெண் தொண்டர்களிடம் சென்று நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா? என்றும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.