” தேமுதிக நல்ல முடிவு எடுக்கும் ” மத்திய அமைச்சர் நம்பிக்கை…!!

  • தேமுதிமுக_வை தங்களின் கூட்டணிக்கு இழுக்க அதிமுக , திமுக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
  • தேமுதிக விரைவில நல்ல முடிவு எடுக்குமென நம்புகின்றேன் என்று சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதி மற்றும் புதுச்சேரியில் N.R காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.அதே போல திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே போல தமிழகத்தில் உள்ள திமுக , அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.அதே போல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விஜயகாந்தை சந்தித்ததை தொடர்ந்து முக.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.மேலும் உடல்நலம் குறித்து பேசியதாக இருவரும் பேட்டியளித்தனர்.
இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எங்களுடன் கூட்டணி குறித்து தேர்தலை சந்திப்பது தொடர்பாக தேமுதிக விரைவில நல்ல முடிவு எடுக்குமென நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.மேலும் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment