கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பு தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார விளைவுகளை குறித்து தொடர்ந்து விமர்சித்து வரக்கூடிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தற்போது நாட்டில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை மத்திய அரசு கையாண்ட விதத்தை தான் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், மத்திய அரசு கையாண்ட விதத்தால் நாட்டில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 1004 வல்லுநர்களை வைத்து அறிவுபூர்வமாக தான் ஒரு ஆய்வை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
அவர் நடத்திய ஆய்வின் மூலம் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கும், இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது எனவும், 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு காரணம் மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கையும் தான் என்று குற்றம் சாட்டுவது நியாயம் தானே எனவும், சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…