நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு, வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த இளைஞர் கஸ்தூரியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் ராம்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய மறுத்ததால் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் கஸ்தூரியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பிணை பெற்று வெளியே வந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாததால் அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று இவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்த ராம்கி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக நீதிபதியிடம் உறுதியளித்தார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் அனுமதியுடன் வழக்கறிஞர்களும் முன்னிலையில் விநாயகர் கோவிலில் ராம்கி மற்றும் கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்றது.
ராம்கி திருமணம் செய்து கொண்டாலும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …