ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய நிர்வாகம்.!

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ டிவிட்டரில் உடனுக்குடன் செய்திகளை வெளியீட்டு எப்போதும்  டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்தது. டிவிட்டரில் 7.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் இது தான் என்று கூட கூறலாம்.

இந்நிலையில், தற்போது ஏஎன்ஐ  பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.
ஏஎன்ஐ  டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. அது என்னவென்றால், ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13-க்கும் கீழ் இருந்ததால்   காரணம் கூறி ட்வீட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.