உ.பி.: பல் மருத்துவருக்கு கத்தி குத்து – 21 வயது இளைஞன் கைது!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில்  ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் கோஷ் சர்மாவை (45) தாத்ரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளார்.

மேலும் குமாயில் மருத்துவமனைக்கு சென்ற நேரம் காத்திருக்கும் நேரமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் அவரை சற்று நேரம் காத்திருக்குமாறு கூறியிருந்தார், இருப்பினும் சிறிது நேரம் கழித்து குமாயில் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாக்குவாதம் முற்றி குமாயில் மருத்துவரை கத்தியால் தாக்கியுள்ளார், இதனையடுத்து மருத்துவர் சர்மா அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விஷால் பாண்டே கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் உடனடியாக குமாயிலை கைது செய்ததாகவும், அவர் மீது ஐபிசி பிரிவு 308 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கத்தி மழுங்கிய நிலையில் இருந்ததால் சர்மாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.