வீட்டு முற்றத்தில் தாயுடன் படுத்திருந்த குழந்தை மாயம்…! சம்பவத்தின் பிண்ணனியில் உள்ள திடுக்கிடும் தகவல்கள்…!

வீட்டு முற்றத்தில் தாயுடன் படுத்திருந்த குழந்தை மாயம்…! சம்பவத்தின் பிண்ணனியில் உள்ள திடுக்கிடும் தகவல்கள்…!

உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே விலங்குகளால் உண்ணப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் மீட்பு.

உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே ஒன்பது மாத பெண் குழந்தையின் பாதியளவு உடல் சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக, குழந்தை ஷிவானியின் பெற்றோர் பூல்பேஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) விஜய் துல், குழந்தையை கண்டுபிடிப்பதற்காக இரண்டு குழுக்களை நியமித்தார். இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங் தலைமையிலான குழுவினர் சடலத்தை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங், ஷிவானியின் வீடு கிராமத்தின் விளிம்பில் உள்ளது மற்றும் விவசாய வயல்களால் சூழப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்பு பயிர்களுக்கு மத்தியில் பன்றிகள், ஓநாய்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பல மாமிச உண்ணிகள் பதுங்கியுள்ளன. சமீபத்தில், ஓநாய்கள் கூட்டம் கிராமத்தில் இரண்டு ஆடுகளை கொன்றது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில், பரிசோதனை முடிவுகள், குழந்தை மிருகத்தால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சில காட்டு விலங்குகள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. ஏற்கனவே, ஜூலை 29 அன்று, மாவட்டத்தின் மைகல்கஞ்ச் பகுதியில் இதேபோல் மூன்று வயது சிறுமி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube