டிக் டாக்கில் மலர்ந்த காதல், திருமணத்துக்கு பின் ஜாதி குறுக்கிட்டதால் கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த காதலன் மற்றும் குடும்பத்தினர்.
சென்னையிலுள்ள வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை செங்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது சாந்தகுமார் என்பவருக்கும் டிக் டாக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமி வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சிறுமியை வீட்டை விட்டு வெளியே வர சொன்ன சாந்தகுமார் தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று மாதங்களாக சந்தோஷமாக இருந்த இவர்களுக்கு இடையில் திடீரென சிறுமி கர்ப்பம் ஆனதும் சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சாந்தகுமார் பெற்றோர் அந்தப் பெண்ணை வெளியே போகும்படி விரட்டியுள்ளனர்.
இந்நிலையில் சாந்தகுமார் தனது பெற்றோருடன் சேர்ந்து 38 வயதான பாஷா எனும் போலி மருத்துவரிடம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு சிறுமியை வீட்டைவிட்டு துரத்திவிட்டுள்ளனர். என்ன செய்வதென்று அறியாமல் காட்பாடியில் உள்ள குழந்தை காப்பகத்தில் சென்று சிறுமி தஞ்சம் அடைந்துள்ள நிலையில், காப்பக அலுவலர்களிடம் தனக்கு நடந்ததை பற்றி கூறியதை அடுத்து அவர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் போலி டாக்டர் பாஷா உட்பட சாந்தகுமார் அவரது உறவினர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர்.
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…