மாணவர்களின் உயிர் தான் முக்கியம் எனவும், பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடத்தினார். அதில் பள்ளிகள் திறப்பது எப்போது? பத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வைக்கலாமா? என பல்வேறு முக்கியமான முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் எனவும் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், பள்ளிகளை ஆய்வு செய்வதில் தாமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் கண்காணிக்கவும், மாணவர்களின் பார்வைத் திறனை அடிக்கடிப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…