இடைத்தேர்தலில் 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் ,சூலூர் ஆகிய 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி  தொடங்கி  ஏப்ரல் 29-ம் தேதி  வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் வருகின்ற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது  4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில்  63 பேர்  போட்டியிடுகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில்  37 பேர்  போட்டியிடுகின்றனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில்  15 பேர்  போட்டியிடுகின்றனர்.

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில்  22 பேர் போட்டியிடுகின்றனர்.

4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 137 பேர் போட்டியிடுகின்றனர்.

author avatar
murugan

Leave a Comment