ஜாடிக்கு ஏற்ற மூடி, மூடிக்கு ஏற்ற ஜாடி என்பது போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருந்தாலும் அவர்கள் மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 22 சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் 23–ந் தேதி தெரிந்து விடும். அன்று மோடி வீட்டுக்கு போவது போல, எடப்பாடி பழனிசாமியும் வீட்டுக்கு போய் விடுவார் என்றும், ஜாடிக்கு ஏற்ற மூடி. மூடிக்கு ஏற்ற ஜாடி என்பது போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், வருகிற 23–ந் தேதி பிறகு மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சி மலரும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment