சபரிமலை செல்லும் பக்தர்களே…உங்கள் குழந்தைகளுக்கு இது தேவையில்லை – கேரள அரசு அறிவிப்பு!

சபரிமலை செல்லும் பக்தர்களே…உங்கள் குழந்தைகளுக்கு இது தேவையில்லை – கேரள அரசு அறிவிப்பு!

கேரளா:சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் (ஆர்டி-பிசிஆர் சோதனை) சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.

மிகவும் பிரபலமான சபரிமலை திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசு, ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது.எனினும்,குழந்தைகள் சோப்பு, சானிடைசர், முகமூடி போன்றவற்றை வைத்திருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுடன் வரும் பிற பெரியவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கூடுதலாக, குழந்தைகளின் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் பொறுப்பாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,பெரியவர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முழு தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணிநேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் (RTPCR) எதிர்மறை சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ளது.

சபரிமலை திருவிழாவை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாநில கொரோனா நெறிமுறைகளின்படி கேரள அரசு இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube