38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

பிரதமர் மோடி – மதிப்பில்லா மகன்.? சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன்.!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மகன் பிரியங்க் கார்கே மீது கர்நாடக பாஜகவினர்  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தால், பிரதான கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது மற்ற கட்சித் தலைவர்களை பற்றி விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி குறித்து விஷப்பாம்பு என விமர்சித்து, பின்னர் தான் அப்படி கூறவில்லை என விளக்கம் அளித்தார்.

அதே போல கார்கே மகன் பிரியங்க் கார்கேவும் பிரச்சார பேச்சால் சிக்கியுள்ளார்.அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது , பிரதமர் மோடி குறித்து மதிப்பில்லாத மகன் (நாலயக் பீட்டா) என விமர்சித்து இருந்தார்.

பிரியங்க் கார்கேவின் இந்த விமர்சனத்தை அடுத்து , பெங்களூருவில், தேர்தல் ஆணையத்தில் கர்நாடக பாஜகவினர் பிரியங்க் கார்கே மீது புகார் அளித்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சித்துள்ளார். அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளனர்.