30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

இம்ரான்கான் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை.!

இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்த போது சிறப்பு ரேஞ்சர் படையினர் அதிரடியாய் அவரை கைது செய்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.

இதனை அடுத்து நேற்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரான்கானை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. இம்ரான்கான் நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான்கான் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அவர் மீது, கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கு பதியப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.