தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லுரிகளில் அதிகாலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த 13 மணிநேர சோதனைக்கு பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, அமைச்சரின் சொந்த காரிலேயே விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சென்ற அமைச்சரிடம் தொடர்ந்து நான்கு மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றுள்ளது.