வீட்டிற்கு தாமதமாக வந்ததால் கேள்வி கேட்ட கணவன்..! ஆத்திரத்தில் ஆசிட் வீசிய மனைவி..!

உத்திரப் பிரதேசத்தில் கணவன் மீது மனைவி ஆசிட் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வீட்டிற்கு தாமதமாக வந்த கணவரின் முகத்தில் அவரது மனைவி ஆசிட் வீசியுள்ளார். கான்பூரில் கூப்பர்கஞ்ச் பகுதியில் டப்பு குப்தா மற்றும் பூனம் தம்பதிகள் வசித்து வருகின்றனர். குப்தாவின் மனைவி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அவர் தனது மனைவியிடம் வீடு திரும்ப தாமதமானதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு பூனம் , அது உன்னுடைய வேலை இல்லை என்று பதிலளித்துள்ளார். சில நிமிடத்தில் இந்த சிறிய பேச்சுவார்த்தை மிகப் பெரிய சண்டையாக மாறியது. சண்டை முற்றியதைத் தொடர்ந்து பூனம் அவரது கணவன் குப்தா மீது ஆசிட்டை வீசினார். இதனால் குப்தாவின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூனத்தை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள மக்களிடம் போலீசார் விசாரித்தபோது குப்தா தான் இதற்கு காரணம் என்றும் அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் சண்டையிடுவார் என்றும் கூறினார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment