படத்தில் நடித்து விட்டு அப்பட இயக்குனரையே கரம்பிடிக்கும் நாயகி!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தில் நடித்த நடிகையையே படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.

தேசிங்கு பெரியசாமி அவர்களின் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இவர்களுடன் ரக்ஷன், நிரஞ்சனி, அகத்தயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தேசிங்கு ராஜாவின் முதல் இயக்கத்தில் நடித்த நடிகை நிரஞ்சினியும் அப்பட இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியும் படப்பிடிப்பின் போதே காதலித்து வந்துள்ளார்கள்.

இருவரும் ஒரே நேரத்தில் காதலித்ததால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் நிரஞ்சினி ஏற்கனவே அஜித்தின் காதல் கோட்டை எனும் படத்தை இயக்கிய இயக்குனரின் மகள். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். குக் வித் கோமாளியின் போட்டியாளராக உள்ள கனியும், தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய திருவின் மனைவியும் தான் இந்த மூன்று மகள்களும். ஏற்கனவே இருவருக்கும் திருமணமாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது மகள் நிரஞ்சினியையும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம் செய்ய உள்ளார்.

author avatar
Rebekal