சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் அதிரடி

நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல இயக்குநர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பல இயக்குநர்களின் மீது பாலியல் குற்றங்களை சுமத்தினார்.இந்த பிரச்சனையில் பல இயக்குனர்களும் சிக்கினார்கள்.

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது அளித்த பேட்டியில் , தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை செய்ய  ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தற்போது  தெலுங்கானா அரசு அமைத்திருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது அளித்த பேட்டியில் ,எனது கனவுகள் இப்போது நிஜமாகி வருகிறது.சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாக இருப்பதில்லை. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ரியல் ஹீரோவாக இருக்கிறார். நான் இத்தனை நாட்களாக தவறாக பேசப்பட்டு வந்தேன் ஆனால் நான் இப்போது கதாநாயகியாக ஆகிவிட்டேன்.

கடந்த 1 வருடமாக நான் சுமந்து வந்த வேதனையும் ,வலியும் இப்போது  பிரசவம் ஆகிவிட்டது என்றும் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Leave a Comment