ஹெல்மெட் அணியாத விவகாரம்: இனிமேல் இதுபோன்று நடக்காது – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது  என்று   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது.அதில்  ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக பொறுப்பேற்க  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யவில்லை எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும். பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவது சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்து டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கை இன்று  ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

இந்நிலையில் இன்று ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது  என்று   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்று   உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

Leave a Comment