ட்விட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு விரைந்து உதவி கரம் நீட்டிய ஆளுநர் தமிழிசை.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காலமானதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் சௌந்தர்ராஜன் அவர்கள், சென்னை வந்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தார் இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் ட்விட்டர் மூலம் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்த குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்ட, தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பெண்ணுக்கு உதவுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் இந்த உதவிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…