அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ்.
அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்களுக்கு, அவர்கள் வசிப்பதற்காக அரசு பங்களா வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அரசு பங்களாவை அங்கிருந்தவர்கள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு பங்களாவிலேயே தங்குவதற்கு அனுமதி கோரிய நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அவரது தம்பி மறைவின் காரணமாக அந்த இல்லத்தை முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் நல்ல நாளான இன்றைய நாளில் இன்றைய தினம் அரசு பங்களாவை காலி செய்து விட்டு, சென்னையில் உள்ள புது வீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வசித்து வந்த வீடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…
TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…
Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…
Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…
Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…