ஆண் நண்பனை காப்பாற்ற தாய்ப்பாலை முகத்தில் தெறித்த பெண்…!

ஆண் நண்பனை காப்பாற்ற தாய்ப்பாலை முகத்தில் தெறித்த பெண்…!

  • ஜெர்மனியில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்.
  • பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் ,அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர். பரிசோதகரின் கவனத்தை திருப்பஅந்த பெண் தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் தெறித்தார்.

கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் உள்ள மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ளூர் டிராம் ஒன்றில் ஒரு பெண் தனது ஆண் நண்பருடன் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்து உள்ளார்.

அப்போது பயணசீட்டு பரிசோதகரிடம் அந்த பெண்ணும் அவரது ஆண் நண்பரும் சிக்கி உள்ளனர்.இதனால் பரிசோதகர் அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை கேட்டு உள்ளார். உடனே அந்த பெண் திடீரென தனது மேலாடையை கழட்டி தாய்ப்பாலை பரிசோதகரின் முகத்தில் அடித்து உள்ளார்.

Image result for tram in Germany

இதனால் பயணசீட்டு பரிசோதகரின் கவனம் ஒரு நிமிடம் திசைதிரும்பிய போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அந்தபெண்ணின் ஆண் நண்பன் அந்த டிராமிலிருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பின்னர் அங்கு போலீசார் வந்தும் அந்த பெண் தனது அடையாள அட்டையை தரவில்லை இதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை தரையில் தள்ளி கைது செய்தனர்.

போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவித்தாலும் அப்பெண் மீது பயணசீட்டு இன்றி பயணம் செய்தது, உடலுக்கு தீங்கை ஏற்படுத்தியது ஆகிய குற்றசாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube