பிரதமர் மோடியிடம் புகாரளித்த சிறுமி…! ஆன்லைன் வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பு..!

நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதாக புகார் அளித்த 6 வயது சிறுமி. சிறுமியின் புகார் எதிரொலியால், மீரில் அம்மாநில நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த, நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வீட்டுவேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், எனது ஆன்லைன் வகுப்பு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிகிறது.

ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களும் நடத்தப்படுகிறது. பின்னர் கம்ப்யூட்டர் வகுப்புகள் நடக்கிறது இதனால் குழந்தைகளுக்கு அதிக வேலை இருக்கிறது. எதற்காக சின்ன குழந்தைகள் இந்த அதிக விலை எதிர்கொள்ள வேண்டும். என்ன செய்வது மோடி ஐயா…? வணக்கம். இவ்வாறு என்ற சிறுமி கூறியிருந்தார். இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில்,சிறுமியின் இந்த வீடியோ எதிரொலியால், காஷ்மீரில் அம்மாநில நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த, நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஆன்லைன் வகுப்பு நடத்த நேரம் ஒதுக்கப்படுவதாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

5 mins ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

21 mins ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

31 mins ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

32 mins ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

51 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

1 hour ago