கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர்…!வைரமுத்து

 கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் வைரமுத்து கூறுகையில்,  கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் .கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும்.மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment