ஒன்றாக படித்து அரசு பணியாளர் தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்த தம்பதி!

ஒன்றாக படித்து அரசு பணியாளர் தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்த தம்பதி!

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும்  அனுபவ் சிங் ,விபா சிங் தம்பதியர்  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் அனுபவ் சிங் ,விபா சிங்  இருவருமே தேர்ச்சி பெற்று ,முதல் இரண்டு இடத்தையும் பிடித்து உள்ளனர்.முதலிடத்தை  கணவர் அனுபவ் சிங் , இரண்டாம் இடத்தை மனைவி விபா சிங்  பிடித்து உள்ளனர்.

இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை கூற முடியாது. நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த தேர்வுக்கு தயாராகினோம். படிக்கும்போது ஒருவருக்கொருவர் உதவும்  வகையில் படித்ததை பகிர்ந்து கொண்டோம் என கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube