பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை – அமைச்சர் தங்கமணி

பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை – அமைச்சர் தங்கமணி

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10,000 பணியிடங்கள் நிரப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, மின் வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube