இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!-ஹிமாச்சலப்பிரதேசம்..!

இளைஞர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக ஹிமாச்சலப்பிரதேசம் மாறியுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஹிமாச்சல் அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ஹிமாச்சல் பிரதேசம் இந்தியாவிலேயே இளைஞர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனை நிகழ காரணமாக இருந்த அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இங்கு தடுப்பூசி பிரச்சாரம் வேகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.