இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் – மத்திய அரசு

இன்று முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, சுற்றுலாத்தலங்கள் அருங்காட்சியங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகள்  அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.