புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது…!

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது.

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் இன்று கூடுகிறது. இக்கூட்டமானது காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது என பேரவை செயலாளர் முனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள் வரும் ஜூன் 16ஆம் தேதியை (புதன்கிழமை) புதுச்சேரி 15வது மாதம் சட்டப்பேரவையின் பேரவைத்தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 9(2)-யின் கீழ்,நியமனச்சீட்டுக்கள் வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நண்பகல் 12.00 மணி வரை, பேரவைச் செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும்.

பேரவைச் நியமனச்சீட்டுக்களை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமனச்சீட்டுக்களை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.