முன்னது வெறி.. பின்னது வீரம்… நீங்கள் யார் பக்கம்.? -கமல் ட்விட்..!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலைதொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சியினரும், தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளனர். இதனிடையே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்? என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan