முதல் கள்ள ஓட்டு கன்னியாகுமாரியில் பதிவானது!

கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது.

தமிழகத்தில் இன்று  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது.கன்னியாகுமரியில் பிலாங்காலை பகுதியில் உள்ள வாக்குச்சவாடியில் அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை வேறொருவர் கள்ள வாக்காக செலுத்தியிருப்பது தெரியவந்தது .இதனை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்று  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment