” ஜாதி மதமற்றவர் ” முதல் சான்று பெற்ற பெண் வழக்கறிஞர்…!!
” ஜாதி மதமற்றவர் ” முதல் சான்று பெற்ற பெண் வழக்கறிஞர்…!!
Posted on by Dinasuvadu desk
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவர் நான் ஜாதி மதமற்றவர் என்று அரசிடம் சான்றிதழை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஸ்னேகா என்ற அவர் தன்னுடைய பள்ளி படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை சாதி பற்றி தெரிவிக்காமலே பயின்றுள்ளார்.பள்ளிப்படிப்பில் இறுதியில் ஜாதி மதம் அற்றவர் என்று அரசிடம் சான்று பெற நினைத்தவர் .
இதற்காக பல ஆண்டுகள் முயற்சித்தும் வந்தார் இதற்காக சாதியன்றவர் என்ற சான்று அளித்ததற்கு முன்னுதாரணம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவரது கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இடையூறுகளை கடந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளார் சினேகா. பெண் வழக்கறிஞரான இவரின் இந்த துணிச்சல்காரமான செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உங்களுக்காக
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!
April 18, 2024