விஜய் ஹசாரே டிராபிக்கான கால் இறுதி சுற்றுகள் முடிவு

விஜய் ஹசாரே டிராபிக்கான கால் இறுதி போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.இதில், சவுராஷ்டிரா பரோடா , ஆந்திர டெல்லி அணிகள் மோதின. சவுராஷ்டிரா-பரோடாவிற்கான போட்டியில்,7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.ஆந்திர-டெல்லி அணிகளுக்கான போட்டியில்,ஆந்திர அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. அரையிறுதி சுற்றில் மகாராஷ்டிரா-கர்நாடகா அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 24ம் தேதியும் சவுராஷ்டிரா-ஆந்திர அணிகளுக்கான போட்டி பிப்ரவரி 25ம் தேதியும் டெல்லியில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விவரம்:

பரோடா 247-8 (குருநல் பாண்டியா 61; சிராக் ஜானி 4-35) சவுராஷ்டிரா 251-7(பாரோட் 82, ஆர்பித் வாசவாடா 45,ஆதித் சேத் 3-38) டெல்லி 111 (ரிஷாப் பாண்ட் 38; டி சிவா குமார் 4-29) ஆந்திர 112-4(அஷ்வின் ஹெபார் 38, ரிக்கி புய் 36; இஷாந்த் சர்மா 1-11)

author avatar
Dinasuvadu desk

Leave a Comment