மகளை சுட்டுக்கொன்ற தந்தை…! பரிதாபமாக உயிரிழந்த 3 மாத கர்ப்பிணி…!

கிருஷ்ணகிரியில், 3 மாத கர்ப்பிணியை மகளை, தந்தையே சுட்டுக் கொன்றுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாதையன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு வயது 60. இவர் குடிவெறிதனத்தில் அவரது மனைவி மாதவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதை அதிகமான காரணத்தினால் தனது மனைவி மாதவியை சுட்டு கொள்ளப்போவதாக நாட்டு துப்பாக்கியை எடுத்து சுடுவதற்காக முயற்சித்துள்ளார்.

இதனை பார்த்த அருணாச்சலத்தின் மகள் வெங்கடலட்சுமி இருவருக்குமிடையே குறுக்கே புகுந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது அருணாச்சலம் தனது மனைவியை சுடுவதற்காக சுட்ட போது வெங்கடலட்சுமியின் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

திருமணமான வெங்கடலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அருணாச்சலத்தை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.