விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது மருமகளுக்கு செய்து வைத்துள்ள மறுமணம் பலரையும் நெகிழ வைக்கிறது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய ரவிசங்கர் என்பவரது மகன் சஞ்சய் சரிதா எனும் பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியின் மகன் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது மருமகள் இளம் வயதில் விதவையாக்கப்பட்டுவிட்டாலே எனும் வருத்தத்தில் இருந்த சரிதாவின் மாமனார், அப்பெண்ணின் குடும்பத்தார் சம்மதத்துடன் மணமகன் தேட ஆரம்பித்துள்ளார்.
அப்பொழுது ஏற்கனவே தனது மனைவியை இழந்து மருமணத்திற்காக காத்திருந்த ராஜேஷ் சோனி என்பாரை கண்டறிந்து, அவர் சம்மதம் தெரிவிக்கவே அனைவர் சம்மதத்துடனும் திருமணத்தை ரவி நடத்தி வைத்துள்ளார். ஆனால், சாதாரணமாக இல்லை கார், கழுத்து நிறைய நகைகள் மற்றும் ரொக்க பணம் என அள்ளிக்கொடுத்து தனது மருமகளுக்கு கவுரவமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் ரவி. மாமனாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…