தளபதிக்கு சூப்பர் ஹீரோ கதை கூறிய பிரபல இயக்குனர்.!

தளபதிக்கு சூப்பர் ஹீரோ கதை கூறிய பிரபல இயக்குனர்.!

தளபதி விஜய்க்கு பா.ரஞ்சித் அவர்கள் காலா படத்திற்கு பிறகு சூப்பர் ஹீரோ கதை கூறியதாகவும்,அந்த  கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் கூறியுள்ளார்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் பா.ரஞ்சித் .அதனை தொடர்ந்து கார்த்தியுடன் மெட்ராஸ் ,ரஜினியுடன் கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.தற்போது இவர் ஆர்யாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை எனும் படத்தை இயக்குகிறார்.அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,சார்பட்டா படத்தினை குறித்தும் ,விஜய்யிடம் பேசிய கதை குறித்தும் மனம் திறந்துள்ளார்.அதில் சார்பட்டா படமானது வடசென்னையில் இரண்டு பரம்பரைக்குள் நடக்கும் குத்துச்சண்டையில் யார் ஜெயிப்பார்கள் என்பது தான் என்று கூறியுள்ளார்.80ஸ் களில் நடைபெறும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதனையடுத்து காலா படத்திற்கு பிறகு விஜய் அவர்களை நேரில் சந்தித்து படத்தின் கதையை கூறியதாக கூறிய பா.ரஞ்சித் ,கதை விஜய்க்கு பிடித்திருந்தாகவும் ,அது ஒரு சூப்பர் ஹீரோ கதை என்று கூறினார்.அவருடன் இணைந்து படத்தினை இயக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube