இருவரின் காதலை நிராகரித்த பின் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இங்கிலாந்து பெண்மணி!

இருவரின் காதலை நிராகரித்ததற்காக பாகிஸ்தானில் வசித்து வந்த இங்கிலாந்தை சேர்ந்த 25 வயது பெண்மணி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய காலங்களில் எல்லாம் ஒரு பெண்ணிடம் சென்று தனது காதலை ஆண்கள் கூறிய பின்பு அந்த பெண்ணை நிராகரித்தாலும் எப்படி அந்த பெண்ணை சம்மதிக்க வைக்கலாம் அந்தப்பெண் விரும்பும்படி நாம் எப்படி மாறலாம் என்பதற்காக ஆண்கள் தங்களை வருத்திக் கொள்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒரு ஆண் பெண்ணிடம் சென்று எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறிய பின், பெண் அதை நிராகரிக்கிறாள் என்றால் உடனடியாக எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிட் அடிப்பதும், கத்தியால் குத்தி கொலை செய்வது, கற்பழித்து கொலை செய்வது என பல கொடூரமான செயல்களை சில ஆண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதுடைய இங்கிலாந்து பெண்மணி மெய்ரா என்பவர் தன்னிடம் வந்து காதலை கூறிய இரண்டு நபர்களிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தற்போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மாமா இது குறித்து கூறுகையில், சாத் அமீர் பட் மற்றும் ஜாஹித் ஜாதுன் ஆகிய இருவர் மெய்ராவிடம் அவர்களது காதலை கூறியதாகவும், ஆனால் இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே நீ கடுமையான பின்விளைவுகளை சந்திப்பாய் என அப்பொழுதே அவளிடம் அவர்கள் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், சாதி அமீர் பட் மீது தான் அதிகம் சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

4 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

6 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

8 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

9 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

9 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

9 hours ago