காடே நடுங்கிப் போச்சு…நடு ரோட்டில் முரட்டு தனமாக சண்டைபோட்ட யானைகள்..வைரலாகும் வீடியோ.!!

அன்றாடம் சமூக வலைதளங்களில் ஏதேனும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில், தற்பொழுது இரண்டு யானைகள் முரட்டு தனமாக சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், இரண்டு பெரிய காட்டு யானைகள் கொடூரமான மற்றும் வன்முறை சண்டையில் ஈடுபடுவதைக் காணலாம். இணையத்தில் நாம் பொதுவாகக் காணும் அபிமான மற்றும் மனதைக் கவரும் யானை வீடியோக்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

இந்த பயங்கரமான வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா டிவிட்டரில் “டைட்டன்கள் மோதும்போது, காடு நடுங்குகிறது” என்று கூறி,  தலைப்புடன் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர்  ஒருவர் ” வாலை அசைப்பது யானைகள் மற்ற யானைகளை விலகி இருக்குமாறு எச்சரிக்கும் ஒரு வழியாகும். யானைகள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்ட இதுவும் ஒரு வழியாகும்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” யானைக்கான சண்டை என்பது சாதாரணமான சண்டை அல்ல” எனவும், அவர்கள் மென்மையான மற்றும் மென்மையான குணம் கொண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. அவர்களும் மோதுவதற்கு காரணங்கள் உண்டு.. நல்ல பதிவு” என பதிவிட்டு வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.