நீண்ட தூரம் விரட்டிய யானை.. தும்பிக்கையால் தூக்கி வீசி இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம்!

நீண்ட தூரம் விரட்டிய யானை.. தும்பிக்கையால் தூக்கி வீசி இளைஞரை மிதித்து கொன்ற சம்பவம்!

நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது.

இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை துரத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் வனத்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக்குறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Join our channel google news Youtube