தர்மபுரியில் 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஏலக்குண்டூர் அருகேயுள்ள பஞ்சப்பள்ளி காப்புக்காடு பகுதியில் அமைந்திருந்த விவசாய கிணற்றில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்துள்ளது . 7 வயது மதிக்கத்தக்க அந்த காட்டு யானை இரையை தேடி சென்ற போது தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளது .
அதனையடுத்து யானையின் சத்தத்தை கேட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தற்போது யானை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே நேரத்தில் கிணற்றில் இருந்து யானையை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவ குழுவினருடனும் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 யானைகள் வரை பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் இறப்பை குறைக்கும் விதத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே…
VVPAT Case : தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்க்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் அனைத்தும் EVM மிஷின்கள்…
RB Udhayakumar: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று…
TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு…
Ruturaj Gaikwad : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான பீல்ட் பிளேஸ்மென்ட் செய்ததாக அம்பதி ராயுடு விமர்சித்துள்ளார்.…
Manjummel Boys: உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தமஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு மற்றும்…