அழுத குழந்தைக்கு ஐந்து ரூபாய் தர மறுத்து ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொன்ற குடிகார தகப்பன்!

அழுத குழந்தைக்கு ஐந்து ரூபாய் தர மறுத்து ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொன்ற குடிகார தகப்பன்!

அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு ஐந்து ரூபாய் கொடுக்குமாறு மனைவி கேட்டதை அடுத்து குழந்தையின் தந்தை ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா என மாவட்டத்தில் உள்ள லொனோரா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய விவேக் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் விவேக்குக்கு அதிகளவில் குடிப்பழக்கம் இருப்பதாகவும், இதனால் அடிக்கடி மனைவியிடம் இவர் சண்டையிடுவார் எனவும் கூறப்படுகிறது. இவரது குழந்தை ஐந்து ரூபாய் இனிப்பு வகையான கஜா எனும் ஒரு திண்பண்டத்தை கேட்டு அழுதுள்ளது. இதனை அடுத்து விவேக்கின் மனைவி அவரிடம் சென்று குழந்தை அழுகிறது ஐந்து ரூபாய் கொடுங்கள் என கேட்க குடிகார கணவனாகிய விவேக் ஆத்திரத்தில் ஐந்து ரூபாய் கொடுக்க மறுத்துள்ளார்.

 அதன் பின் கோவத்தில் அழுது கொண்டிருந்த குழந்தையை தரையில் தூக்கி அடித்துளளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற தாய் எவ்வளவு போராடினாலும் தலையில் அடிபட்டதால் குழந்தை அவ்விடத்திலேயே உயிரை இழந்தது. தனது கணவரின் செயலால் மனமுடந்த குழந்தையின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவேக்கை கைது செய்துள்ளனர். குடித்துவிட்டு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தனது குழந்தையையே கொன்றுள்ள விவேக்கின் செயல் அருகில் உள்ளவர்களை கலங்க வைத்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube