இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற  தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

 எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 5- ஆம் தேதிக்குள்  இறுதி வாக்காளர் பட்டியலில்  திருத்தம் செய்யப்பட்டு,ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தாண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.இந்த பட்டியலில் திருத்தம் செய்ய ,இன்று முதல்  (15/11/2020) முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 21  , 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக  சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
murugan

Leave a Comment