எஜமானியின் குடும்பத்தை காப்பாற்ற தான் உயிரை கொடுத்த நாய் !

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தெருவை சார்ந்த பாபு.இவர் வெளிநாட்டு நிறுவனத்தில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர் மனைவி பொன்செல்வி நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்செல்வி தனது வீட்டில் டேசன் இனத்தை சார்ந்த இரண்டு நாய்கள் வளர்த்து வந்தனர்.அதில் ஒரு அப்பு என்ற ஆண் நாய்யும் , நிம்மி என்ற பெண்  நாய்யும் உள்ளது.

நேற்று முன்தினம்  பொன்செல்வி தனது வீட்டில் மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு நுழைந்து உள்ளது.அந்த பாம்பை பார்த்த ஆண் நாய் பாம்பின் மீது பாய்ந்து கடித்து குதறியது.இதில் அந்த பாம்பும் நாயை கொத்தியது.

அடுத்த மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த பொன்செல்வி வீட்டின்  கதவின் பக்கத்தில் பெண் நாய் மட்டும் இருந்தது.பிறகு ஆண் நாயை தேடி பார்த்த போது ஆண் நாய் இறந்து கிடந்தது.அதன் அருகில் ஒரு நல்ல பாம்பும் இறந்தது கிடைத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார் பொன்செல்வி.

தனது எஜமானியின் குடும்பத்தை காப்பாற்ற தான் உயிரையே கொடுத்த அந்த நாயை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

author avatar
murugan